பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68சதவீத பகுதி ஏதோவொரு வகையான மண்சரிவு அபாயத்தைக் கொண்டுள்ளது

 


 

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68சதவீத பகுதி ஏதோவொரு வகையான மண்சரிவு அபாயத்தைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 
 
நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலை காரணமாக, பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 368 பிரதான மண்சரிவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 
 
இந்த மண்சரிவு அபாயம் காரணமாக, சுமார் 650 வீடுகள் அதி உயர் அபாய நிலைக்குள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்துள்ளார்.