ஆழிப்பேரலை 21ஆம்ஆண்டு நினைவேந்தல்; கண்ணீரில் மிதந்தது மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் .

 

 



























கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் மட்டக்களப்பு  கல்லடி புதுமுகத்துவரம் , நாவலடி போன்ற இடங்களில் பெருமளவான மக்கள் உயிரிழந்தனர் .

இந் நிலையில் இவ்வாறு உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26.12.2025- இன்று கல்லடி புதுமுகத்துவரம்  திருச்செந்தூர் பிரதான நினைவு தூபியில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

கிறிஸ்தவ மத தலைவரின் மத அனுஷ்டானங்களை   தொடர்ந்து  பொதுச்சுடர் ஏற்றப்பட்டு  உயிரிழந்தவர்களின்  உறவுகளால்   ஈகைச்சுடர்  ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து ஆழிப்பேரலையின்போது உயிரிழந்த உறவுகளின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவப்பட்டு, சுடரேற்றப்பட்டதுடன், ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து தமது அஞ்சலிகளை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டனர்.

மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்தவர்களின் உறவுகள் மற்றும்      கிராமமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.