மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தினூடாக முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் '' சிறுவர் நாம் உலகை வெல்வதற்கு - விளையாட்டுக்கும் இடமளியுங்கள் '' எனும் தொனிப்பொருளில் லைட் ஹவுஸ் மைதானத்தில் இடம் பெற்ற சிறார்களுக்கான
விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி j.j முரளீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் (காணி ) திருமதி N .முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் திரு G. பிரணவன் , மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இனணப்பாளர் திரு வீ் .முரளிதரன் ,கிழக்கு மாகண பாலர் பாடசாலை கல்வி பணியகத்தின் பொது முகாமையாளர் திரு ஜயவதணன் ,அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிதிகள் .மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொன்டனர் .இங் நிகழ்வில் திராய்மடு பிரிவிற்கு உட்பட்ட முன்பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றியதுடன் அவர்களுக்கான பரிசு பொருள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .