க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததை தொடர்ந்து மாணவர்கள் தமது பாடசாலையை பேராலயமாக மதித்து விழுந்து வணங்கிய செயற்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

 


க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததை தொடர்ந்து   இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள்  தமது பாடசாலையை பேராலயமாக மதித்து விழுந்து வணங்கிய செயற்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 

குறித்த செயற்பாட்டின்  புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

பரீட்சைகள் முடிவடைந்ததும், பரிட்சை மண்டபத்தை மேற்பார்வை செய்த ஆசிரியர்களை  வணங்கி விடை பெற்றதுடன்,  தமது பாடசாலை சூழலை சிரமதான பணிகளின் ஊடாக தூய்மைப் படுத்தியிருந்தனர். 

குறித்த செயற்பாடானது  இளையவர்களுக்கான வழிகாட்டலாகவும் அமைந்துள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.