மட்டக்களப்பு மீன்பிடி திணைக்களத்திற்கு முதல் தடவையாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் அழைப்பினை மேற்கொண்டதன் விஜயமாகவே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஆற்றை ஆளப்படுத்துதல் களப்பு இறங்குதுறை அமைத்தல் புதிய தொழில்நுட்பத்தில் ஊடாக கூடிய அளவிலான மீன் பிடி வசதிகளை ஏற்படுத்தவும், சட்டவிரோத மீன்பிடி வலைகளை தடுக்கும் முகமாகவும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
சட்டவிரோத மீன்பிடியை தடுத்து கடல் வளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீர்யல்வள உதவி பணிப்பாளர் ருக்சான் குரூஸ், மற்றும் கடற் தொழிலாளர்கள், மீனவர் சங்கத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.