இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது பாதுகாப்பு, எரிசக்தி இணைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MOU) கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தியப் பிரதமர் ஏப்ரல் 4 ஆம் தேதி மாலை இலங்கைக்கு வருவார் என்றும் ஏப்ரல் 6 வரை இலங்கையில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி அனுராதபுரத்திற்கும் பயணம் செய்து, அங்கு இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளின் அடையாளமாக ஜெய ஸ்ரீ மகா போதியில் மத அனுஷ்டானங்களில் கலந்து கொள்வதோடு அனுராதபுரத்தில், சில இந்திய நிதியுதவி திட்டங்களையும் தொடங்கி வைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.





