இளம் எழுத்தாளர்களுக்கான இலக்கிய அமர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம் பெற்றது .2024.08.26

 


 


 











 

FREELANCER



புத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,   கலாச்சார அலுவல்கள் திணைக்களம்  ,   இலங்கை கலைக்கழகம்,   மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பன  ஒன்றிணைந்து  ஏற்பாடு  செய்த  மட்டக்களப்பு மாவட்ட இளம் எழுத்தாளர்களுக்கான  இலக்கிய  அமர்வு  மட்டக்களப்பு  மண்முனை வடக்கு பிரதேச  செயலக டேபா  மண்டபத்தில்  இடம் பெற்றது. .
மட்டக்களப்பு  மாவட்ட செயலாளர்  மற்றும் உதவி  மாவட்ட  செயலாளரின் ஆலோசனையின் பேரில் ,மட்டக்களப்பு மாவட்ட   தமிழ் இலக்கிய துறையில் எழுத்தாளர்களின்  பங்குபற்றுதல்களையும் ,  தேசிய ரீதியில்  அவர்களின் எழுத்தாற்றல்களையும் ,   ஊக்குவிப்பதற்குமான செயலமர்வு  இலங்கை கலைக்கழகத்தின்  அனுசரணையுடன் இடம் பெற்றது .
பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவரும் , பேராசிரியருமான ஸ்ரீ பிரசாந்தன் வளவாளராக  கலந்து கொண்டார். .
இலங்கை கலைக்கழக உறுப்பினரும் , கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அரச  இலக்கிய  ஆலோசனை  குழு   உப செயலாளர் இணேஷ் ,  மாவட்ட  கலாச்சார  உத்தியோகத்தர்   MAC.ஜெயினாலாப்தீன், மாவட்ட  கலாச்சார உத்தியோகத்தர்கள்  மற்றும் 14-. பிரதேச செயலகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட  இளம்  எழுத்தாளர்கள்  செயலமவில்  பங்கு  பற்றி இருந்தார்கள் .