FREELANCER
மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கிராமஅபிவிருத்தி சங்கத்துக்குரிய காணியில் மதில் அமைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இரா சாணக்கியன் அவர்களால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது , அந்த வகையில் 2024 06 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5. 30 மணியளவில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது அடிக்கல்லினை கௌரவ இரா சாணக்கியன் ( பா . உ ) அவர்கள் நட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் அவரது செயலாளர் மதி மேனன் ,ஒருங்கிணைப்பு செயலாளர் தினேஷ் குமார் ஆறாம் வட்டாரத் தலைவர் பிரதீப் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர், மேலும் ஜெயந்திபுர கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி உத்தியோகத்தர் , பிரதேச போலீஸ் உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
ஜெயந்திபுரம் கிராமஅபிவிருத்தி சங்கத்தலைவர் தலைவர் திரு முகுந்தன் அவர்கள் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது . கிராமஅபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாதர் கிராமஅபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், முழுமதி சகவாழ்வு சங்க உறுப்பினர்கள் ஜெயந்திபுரம் சிரேஷ்ட பிரஜைகள் சங்க உறுப்பினர்கள், முழுமதி விளையாட்டுகழக உறுப்பினர்கள், முழுமதி இளைஞர் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு ஸ்ரீ குமாரத்தன் ஆலய தலைவர் , உபதலைவர் , பொருளாளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்