மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக வளாகத்தில் இருந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் பழந்தோட்ட பிள்ளையார் ஆலய வருடாந்த சங்காபிஷேக நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இன்றைய தினம் (25.06.2024) மிகவும்
சிறப்பான முறையில் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்களினால் ஒழுங்குசெய்யப்பட்ட அன்னதான நிகழ்வும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.