FREELANCER
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மண் முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்கள் கலந்து கொண்டார் இதன் போது 18.05.2024 அன்று இடம்பெற்ற வெசாக் அலங்காரக் கூடு கட்டும்் போட்டி நிகழ்வில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பண பரிசல்கள் வழங்கப்பட்டது.
மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தில் இலவச பாடநெறியினை கல்வி பயின்று வருடம் தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்டமாணவர்கள் வெளியேறுகின்றனர் இவ்வாறு 2024ஆண்டு சுமார் 600 மாணவர்கள் பதிவு செய்யப்பட்டு கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இதில் சிங்களம் மற்றும் ஆங்கில பாடத்தினை கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்து நடத்தி இருந்தார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் வெசாக் தன்சல் நிகழ்வு இடம் பெற்றது ,மண் முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்கள் வெசாக் தன்சல் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் .பார்வையாளர்களுக்கும் , பொது மக்களுக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன
















































