FREELANCER
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சாதாரண) தரப் பரீட்சையில் தோற்றிய மாணவி செல்வி ஏரம்பமூர்த்தி அக்ஷாணி 8 A 1B இல் சித்தி பெற்றிருந்த நிலையில் B பெற்றிருந்த பாடத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு விண்ணப்பித்து இருந்தார் , பரீட்சை திணைக்களம் பரிசீலனையின் பின்னர் குறிப்பிட்ட பாடத்தில் எ சித்தி பெற்றதாக உறுதிப்படுத்தி இருந்தது. .
ஏற்கனவே விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சாதாரண) தரப் பரீட்சையில் 9 மாணவிகள் 9-A பெறுபேறுகளை பெற்று சாதனை புரிந்துள்ளனர் , தற்போது 10மாணவிகள் 9Aபெற்று புதிய சாதனையை நிலைநாட்டி உள்ளனர் .
அதிபரின் தலைமையின் கீழ் கல்லூரி நிர்வாகமானது சிறப்புடன் செயற்பட்டதன் காரணமாக சிறப்பான பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள்.இது கல்லூரியின் கல்வி வளர்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை காட்டுகிறது
.சிறப்பான பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை தேடித்தந்த மாணவிகளுக்கு கல்விச் சமூகம் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது .









.jpg)
.jpg)




