தே.இ.சே.மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளராக நாகலிங்கம் குகேந்திரா தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்

 

 

வரதன்

 நாகலிங்கம் குகேந்திரா அவர்கள்
1993- 1997 வரை புனர்வாழ்வு நிலையங்களில் நலன்புரி அதிகாரியாக கண்டி பல்லேகல, பண்டாரவளை பிந்துனுவவ,ஹம்பாந்தோட்டை விரவில போன்ற புனர்வாழ்வு நிலையங்களிலும் கடமையாற்றி உள்ளார் .
1997 தொடக்கம் இன்றுவரை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் உதவி இளைஞர் சேவை அலுவலகராக நியமனம் பெற்று  2014 -2021 வரை கிளிநொச்சி மாவட்ட மாவட்ட இளைஞர் சேவை அலுவலராகவும் உதவிப்பணிப்பாளராகவும் கடமையாற்றியதுடன்  2021 தொடக்கம் 2024.02.08 வரை முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பணிப்பாளராக கடமை புரிந்து பின்னர்  10 வருடகாலமாக வடமாகாணத்தில் கடமையாற்றி 2024.02.09 ம் திகதி அன்று கிழக்கு மாகாண காரியாலயத்தில் கடமை புரிந்து  கொண்டதுடன்  2024.02.12இன்று முதல்  தே.இ.சே.மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.