அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் வேகமாக அதிகரிக்கும் என கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனவரி மாதம் முதல் வற் வரி அதிகரிக்கப்பட்டமை இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். கையடக்கத் தொலைபேசிகள் இதுவரை VAT நோக்கத்திற்காக சேர்க்கப்படவில்லை என கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் சுமார் 18 வீதத்தினால் அதிகரிக்குமென அவர்கள் மேலும் தெரிவிக்கின்றன.