கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தங்களது அனுமதி அட்டைகளில் பாடம், மொழிமூலம், பிறந்த திகதி பெயர் என்பவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளவுள்ள இருப்பின் அதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதாவது எதிர்வரும் 22 ஆம் திகதி 12 மணிவரையில் இந்த திருத்தங்களை மேற்கொள்ளலாம் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நவம்பர் மாதம் இடம்பெறவிருந்த 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.