நிபுணர் குழுவொன்றை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

 


முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரைக்கும் திருகோணமலை திரியாய் விகாரைக்கும் தொல்பொருள் தேவைகளுக்காக 5000 ஏக்கர் காணி உரிமை கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நிபுணர் குழுவொன்றை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரைக்கு 3000 ஏக்கர் நிலமும் திருகோணமலை திரியாய் விகாரைக்கு 2000 ஏக்கர் நிலமும் கோரப்பட்டுள்ளது. 

 வனவளத் திணைக்களம், காணி திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றுக்குச் சொந்தமான பெருமளவிலான காணியை விஞ்ஞான ரீதியான காணி எனக் கூறுவதன் அடிப்படை என்ன என்பதை உடனடியாகக் கண்டறியுமாறு அதிபர் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.