பிராந்தியத்தில் எந்தவொரு நாட்டிலும் செய்யப்படாத குற்றவியல் அவதூறு
சட்டத்தை நீக்கியதன் மூலம் கருத்து சுதந்திர உரிமையை இல்லாதொழிக்க
ஒருபோதும் செயற்படப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
வலியுறுத்தியுள்ளார்.
உத்தேச இலத்திரனியல் ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டத்தின் ஊடாக
இலத்திரனியல் ஊடகத்தினால் எந்தவொரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டால்
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்குவது
மாத்திரமே இடம்பெறும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகில் ஒவ்வொரு நாட்டிலும் இலத்திரனியல் ஊடகங்களைக் கையாள்வதற்கு இவ்வாறான
முறை பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய
இராச்சியத்திலும் இலத்திரனியல் ஊடகங்களுக்கான வழிகாட்டல்களை இலங்கையிலும்
அமுல்படுத்தும் வகையில் உள்ளடக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஹோமாகம பிரதேச செயலக வளாகத்தில் வெளிநாட்டு
கடவுச்சீட்டுகளை இணையத்தளத்தில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து
வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத்
தெரிவித்தார்.