மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது

 


 காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு  வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ததுடன் 86 கசிப்பு போத்தல்கள்  மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மாவட்ட புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து ஆரையம்பதி சிகரம் பிரதேசத்திலுள்ள கசிப்பு விற்பனை நிலையத்தை செவ்வாய்க்கிழமை (13)   முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது அங்கிருந்து 86 போத்தல் கொண்ட 63 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கசிப்பை மீட்டதுடன் வியாபாரத்தில் ஈடுபட்ட 49 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.