சுமார் 20 வருடங்கள் தலைமறைவாக இருந்த மரண தண்டனை கைதி கைது செய்யப்பட்டார்.

 


சுமார் 20 வருடங்கள் தலைமறைவாக இருந்த 54 வயதுடைய மரண தண்டனை கைதி ஒருவர் ராகமவில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் மற்றும் அவரது சகோதரருமாக இருவரும் நபர் ஒருவரை கடந்த 2001 ஆம் ஆண்டு கூரிய ஆயுதங்களால் தாக்கி, அவரை அடித்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து இரண்டு சகோதரர்களும் விளக்கமறியலில் இருந்தனர், 2004 சுனாமியைத் தொடர்ந்து, அவர்கள் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

அவ்வாறு அவர்கள் வேறு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் தப்பித்து தப்பிச் சென்றார்.

இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் 2012 இல் விடுவிக்கப்பட்ட நிலையில், தப்பியோடியவருக்கு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மரணதண்டனை விதிக்கப்பட்டவர் தலைமறைவாக இருந்து நிலையில், சுமார் இரண்டு தசாப்தங்களின் பின்னர் நேற்று புதன்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று வியாழக்கிழமை (15) அவர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.