ஒரு நாள் சேவையின் ஊடாக நாளொன்றுக்கு 2500 முதல் 3000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவையின் ஊடாக நாளொன்றுக்கு 2500 முதல் 3000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஒரு நாள் சேவையின் மூலம் சுமார் 1500 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், சேவைக் கட்டண அதிகரிப்புடன், சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்குவதற்கு 20,000 ரூபா அறவிடப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.