25 பிரமிட் நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை விதித்துள்ளது .

 


திருத்தப்பட்ட 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 83(C) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையின் பின்னர், மேலும் ஒரு பிரமிட் திட்டத்தை தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன் மூலம், மத்திய வங்கியால் இதுவரை அடையாளம் காணப்பட்டு தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் மற்றும் செயலிகளின் மொத்த எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறான பிரமிட் திட்டங்கள் இலங்கையின் வங்கிச் சட்டத்தின் கீழ் முற்றிலும் தடைசெய்யப்பட்டவை என மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

 மேலும், அதிக இலாபம் வழங்குவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் மோசடித் திட்டங்களில் முதலீடு செய்வதையும், அவற்றில் உறுப்பினர்களாக இணைவதையும் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் மத்திய வங்கி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.