2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திகதிக்கமையவே நடைபெறும்.

 


2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திகதிக்கமையவே நடைபெறும் என்றும், அதனை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனை நாடாளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இது குறித்துக் கேள்விக்கு பதில் வழங்கிய பிரதி அமைச்சர் ,