மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் உயிர் இழப்பு.










மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபகரமான முறையில் பலியானதாக தெரிய வருகிறது

இன்று 1.30 மணி அளவில் குறித்த நபர் தனது வீட்டுக்கருகாமையில் உள்ள  குளக்கட்டு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த போது  பாம்பு தீண்டியதாக அயலவர்கள் தெரிவிக்கிற்றனர்.

குறித்த திருநீற்றுக்கேணியிலள்ள குறித்த நீண்ட காலமாக  பாம்புகள் இருப்பதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர் அதேநேரம் முதலைகளின் தொல்லைகளும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யோகராசா தில்லைவாசகம் என்னும் இரண்டு பெண் பள்ளைகளின் தந்தையான 38 வயது நபரே இவ்வாறு பலியானதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்

மரணமானவரின் சடலம் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்