ஞாயிறு தாக்குதலே, அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட மிகப்பெரிய சோகமாகும்- ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

 

 

 


பொலன்னறுவையில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட மிகப்பெரிய சோகமான நிகழ்வு என தெரிவித்தார்.

“2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலே, அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட மிகப்பெரிய சோகமாகும்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஐந்தரை ஆண்டுகளாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில், உண்மையான மூளையாக செயல்பட்டவர்களை மறைப்பதே நோக்கமாக இருந்ததாக ஜனாதிபதி மேலும் குற்றஞ்சாட்டினார்.

“2019இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கமும், அதற்குப் பின்னர் ஆட்சியில் இருந்தவர்களும் உண்மையான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு எந்த நோக்கமும் கொண்டிருக்கவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களுக்குள், ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கும், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் படிப்படியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.