பஸ் வண்டி ஒன்று அம்பாறை – வங்களாவடி பிரதான வீதியை விட்டு விலகி பள்ளத்தின் ஊடாக பயணித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது

 


இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று பயணிகளுடன் அம்பாறை நோக்கிச் செல்லும் போது வீதியைவிட்டு விலகி பள்ளமொன்றில் சரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்கான காரணம் பற்றி இதுவரை தகவல் கிடைக்கவில்லை.

விபத்துக்குள்ளான பஸ் வண்டியை மீட்கும் பணி நடைபெறுவதுடன் சம்மாந்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.