வைத்தியர் ஒருவர் வசித்த வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

 




வைத்தியர் ஒருவர், அவருடைய  அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தம்புத்தேகமவில் இடம்பெற்றுள்ளது என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புத்தேகம வைத்தியசாலையில் பணிபுரிந்த 35 வயதான வைத்தியர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த வைத்தியர் மூன்று நாட்களுக்கு முன்னர் மரணமடைந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.