போரை நிறைவுக்கு கொண்டு வந்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மீது பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படக்கூடாதென சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மிகிந்தலையில் இடம்பெற்ற கட்சி கூட்டமொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கையில் தேர்தலொன்று நடத்தப்பட்டால் அதில் தனிநபராக அதிக வாக்குகளை பெற்று வெற்றியீட்ட மகிந்த ராஜபக்சவால் முடியுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் ஒருவர் கட்டாயம் வெற்றி பெறுவார் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.