தொடர்ந்து 5 நாட்கள் நாட்டில் வங்கி சேவை இருக்காது .

 

 


 ஹஜ் பண்டிகைக்காக இன்று வங்கி மற்றும் பொது விடுமுறை தினமாகும்.
அன்றைய தினம் ஹஜ் பண்டிகைக்காக ஆண்டின் தொடக்கத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை வங்கிகளுக்கு விசேட விடுமுறை அளிப்பதாக அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதன்போது ஜூலை மாதம் முதலாம் மற்றும் 2ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமையாகும். ஜூலை மாதம் 3 ஆம் திகதி போயா தினமாகும்.
இதனால், தொடர்ந்து 5 நாட்கள் நாட்டின் வங்கி சேவை முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.