தன்னை மாந்திரீகர் என அடையாளப்படுத்தி பெண் ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய நபரொருவரை கொஸ்கம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தனது மாந்திரீகம் எப்போதும் பிழைக்காது என்று முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் பிரகாரம் பெண்ணொருவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று, போதை பானத்தைக் கொடுத்து, நிர்வாணமாக்கி, புகைப்படம் எடுத்து பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குறித்த பெண் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தன்னை விட்டு பிரிந்து வாழும் கணவனை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக மாந்திரீகம் செய்ய விரும்புவதாக கூறியதையடுத்து சந்தேக நபருக்கு அந்த பெண்ணின் தொலைபேசி இலக்கம் கிடைத்துள்ளது.
குறித்த பெண்ணை பூஜை ஒன்றில் கலந்து கொள்ளுமாறு கூறிவிட்டு சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குருநாகல், கும்புக்கெட்டே பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்..





