
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுகுட்பட் சந்திவெளி பிரதேச வைத்திய சாலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மகபேற்று விடுதி இயங்காமை செயற்பட்டது , இதனால் அப்பிரதேசத்தில் இருக்கும் கர்ப்பிணி தாய்மார்கள் சிகிற்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர் இதனால் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மிகவும் சிரமங்களை எதிர் நோக்க வேண்டியிருந்தது, இப்பிரச்சணைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிரான் சுகாதார வைத்திய அதிகாரியும் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்புவாய்ந்த வைத்தியருமான Dr.S.சிவலக்சன் அவர்களால் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.R.முரளீஸ்வரன்sir அவர்களின் கவனத்துக்கு கொண்டுவந்ததுடன் நேற்றைய 02.06.2025 திங்கட்கிழமை வாழைச்சேனை ஆதார வைத்திய சாலையின் மகபேற்று நிபுணர் Dr.திலக்சன் (vog) அவர்களால் வைத்திய சாலையின் மகபேற்று விடுதியினை நேரடியாக பார்வையிடப்பட்டு மகபேற்று விடுதியினை மீள இயக்குவதற்கான ஆலோசனைகளும் வழங்கபட்டது ..
இவ் வைத்திய சாலையில் மகபேற்று விடுதிமீண்டும் இயங்குவதற்கு தன்னாலான முயற்சிகளை கிரான் சுகாதார வைத்திய அதிகாரியும் பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியருமானDr.சி.சிவலக்சன் மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடதக்க விடயம்..