மட்டக்களப்பு, வாழைச்சேனை கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் முதலை இழுத்துச் சென்ற நபர், இரண்டு நாட்கள் கழித்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

 


 

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் முதலை இழுத்துச் சென்ற நபர், இரண்டு நாட்கள் கழித்து இன்று (22/05) உருகுலைந்த நிலையில் இடுப்பு மேற்பகுதியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
20/05 அன்று, மந்திரியாறு நீரோடையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது முதலை இழுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு முதலை இழுத்துச் சென்றவர் சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பஸ்தர் வி. கிருஸ்ணதீபன் (அசோக்) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த இரு நாட்களாக அவரது குடும்பத்தினரும் பொதுமக்களும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை, இடுப்புக்கு கீழ் பகுதி இல்லாத நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பொலிஸார் இது தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். திடீர் மரண விசாரணை அதிகாரியும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான வைத்திய பரிசோதனைகளையும் செயலில் ஈடுபட்டுள்ளார்கள்.