FREELANCER
வரலாற்று சிறப்புமிக்க கிழக்கிலங்கை மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 01/07/2024 அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது
30.06.2024. திகதி ஞாயிற்று கிழமை மட்டக்களப்பு தாமரைக்கேணி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபையினரால் கொடியேற்றத்துக்குரிய கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இடம் பெற்றது .
மட்டக்களப்பு பிரதேச 21கிராமத்தை சேர்ந்த மக்களால் தொடர்ச்சியாக ஆலய பெருவிழா பூஜைகளும் , கிரிகைகளும் நடத்தப்பட உள்ளது .
உற்சவ காலங்களில் ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்களுக்காக அன்னதான சபையினரால் 2024.07.12. திகதி முதல் அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஆரம்பமானது .
2024.07.22. அன்று திங்கள்கிழமை காலை வேளை 6.00 மணிக்கு திருகோண நட்சத்திரத்தில் தாந்தாமலையின் அடிவாரத்தில் அமையப்பெற்ற தீர்த்தக் குளத்தில் தீர்த்தோற்சவதுடன் மகோற்சவத் திருவிழா இனிதே நிறைவு பெற உள்ளது.