ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.

 


யாழ்ப்பாண(Jaffna) மாவட்ட ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டம் நாளை(19) ஆம் திகதி யாழ்ப்பாண பிரதான பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி நள்ளிரவு ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டிற்குச் சென்ற இனந்தெரியாதோர் வீட்டை தீயிட்டு எரித்து சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினரால் பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.