எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாகதீபம் மற்றும் நயினாதீவு ஆலயம் ஆகியவற்றில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
யாழ். மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் பாடசாலை பஸ் வழங்கி வைக்கும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதீப ரஜமகா விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், விஹாராதிபதி அதி வண. நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்துக்கும் சென்று விசேட வழிபாடுகளை மேற்கொண்டார்.
ஆலயத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவரை, ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் குருபரன் மதன்ராஜ் , ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர் ஆகியோர் வரவேற்று, பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர். ஆலய பிரதம குரு தலைமையில் இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொண்டார்.