பாகிஸ்தானில் இரண்டு இந்துக் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 


பாகிஸ்தானில் இரண்டு இந்துக் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அதில் ஒரு கோவில் மீது ரொக்கட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் இந்துக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் இராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டுகால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது. மாரி மாதா என்ற பெயரிலான அந்த கோவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.

 அதேபோன்று சிந்து மாகாணத்தின் காஷ்மோர் நகரில் உள்ள ஒரு கோவில் மீது நேற்று இனந்தெரியாதவர்கள் ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.