கைக்குண்டு மற்றும் தோட்டாட்களுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது! Arreast

 

 


 எட்டவீரகொல்லேவ, கோன்கொல்லேவ பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்று, 52 டி-56 ரகத் தோட்டாக்கள் மற்றும் 30 ஒன்பது மி.மீ ரகத் தோட்டாக்கள் ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

எட்டவீரகொல்லேவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் எட்டவீரகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எட்டவீரகொல்லேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.