இலங்கை உட்பட உலகெங்கிலும் இருந்து சபரிமலைக்கு செல்லும் இலட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு கேரள மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அங்கு பரவி வரும் அமீபா மூளைக்காய்ச்சலை கவனத்திற் கொண்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கேரள மாநில சுகாதாரத்துறை பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கேரளாவில் அமீபா மூளைக் காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணமடைந்துள்ள நிலையிலேயே மேற்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன. கேரளாவில் அமீபா மூளைக் காய்ச்சல் பாதிப்புகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.





